ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது… சொல்கிறார் ஓ.பி.எஸ்
காஞ்சிபுரம்: ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து திருப்போரூர் பேருந்து நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், மத்தியில் காங்கிரஸ். - திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஓ மை சன்.. அப்பாவின் தொகுதியை எடுத்துக் கொண்ட மகன்.. அகிலேஷ் யாதவின் அதிரடி அறிவிப்பு!
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலோடு நடக்க உள்ள, இந்த இடைத்தேர்தல் தேவையில்லாத தேர்தல் என்றும் திணிக்கப்பட்ட தேர்தல் எனவும் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?