''காஞ்சி சங்கரமடத்தை தரைமட்டமாக்கி விடுவோம்''! விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆவேசம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கி விடுவோம் என என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் எழிலரசு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு எதிரே பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய விசிக மாவட்டச் செயலாளர் எழிலரசு, சங்கர மடம் மீதான தனது கோபத்தை கொட்டித்தீர்த்தார்.

விசிக மாவட்டச் செயலாளர் எழிலரசு பேசிக்கொண்டிருந்த போது, அதிக சப்தத்தில் சங்கர மடத்தில் சுப்ரபாதம் ஒலிக்கவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் விசிக மாவட்டச் செயலாளர் ஆத்திரமடைந்து, சங்கர மடத்தை அடித்து நொறுக்குவோம் என பேசியதாக காரணம் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேர் வந்தால் போதும் சங்கர மடத்தின் செங்கற்கள் தனித்தனியாக பெயர்த்து எடுக்கப்படும் என எழிலரசு பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அங்கிருந்த காவல்துறையினர் காஞ்சி சங்கர மட நிர்வாகிகளிடம் கூறி ஆர்ப்பாட்டம் முடியும் வரை சுப்ரபாதம் ஒலிக்க விட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவித நிகழ்வுகளில் ஏதும் இறங்கிவிடக் கூடாது என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சங்கர மடத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதை நிறுத்தியதும், பேச வந்த கருத்தை பேசிவிட்டு பாசிச எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர். இதனால் காஞ்சிபுரம் நகர காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.












Click it and Unblock the Notifications