பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. மயக்கவியல் துறை மருத்துவ மாணவி தற்கொலை.. நடந்தது என்ன?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை முதுகலை மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் முதுகலை பட்டம் படித்து வந்தார்.

இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி கல்லூரி செல்லாமல் இவர் விடுதியிலேயே தங்கிவிட்டதாக தெரிகிறது. கல்லூரி முடிந்து சக மாணவிகள் விடுதிக்கு சென்றனர்.
அப்போது சுகிர்தாவுடன் தங்கியிருந்த மாணவிகள் அவருடைய அறைக்கு சென்ற போது அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி சுகிர்தா இறந்து கிடந்தார்.
உடன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றிய போலீஸார் அவரை ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது அங்கு ஊசியும் மருந்து பாட்டிலும் இருந்தது. அந்த மருந்து குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்து என்றனர்.
மேலும் அறையை சோதனையிட்ட போது ஒரு கடிதம் சிக்கியது. அதில் டாக்டர் பரமசிவன் மயக்கவியல் துறை பேராசிரியர் தன்னை உடலளவிலும் மனதளவிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் டாக்டர் ஹரீஷ், டாக்டர் ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுகிர்தாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக இதுவரை 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட பரமசிவன், ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் கல்லூரி நிர்வாகம் அளித்த அறிக்கையில் பேராசிரியர் சஸ்பெண்ட் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் விடுதியில் வரும் புகார்களை விசாரிக்க குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications