கன்னியாகுமரி அருகே நடந்து போன 40 வயது பெண்.. பின்னாடியே வந்த 25 வயது இளைஞன்.. ஆடிப்போன பொதுமக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 40 வயது பெண், அந்த பகுதியின் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கவின் என்ற இளைஞர் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 40 வயது பெண்,அந்த பகுதியின் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த பரமன்விளையை சேர்ந்த கவின் (25) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளார்கள். அதற்குள் கவின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து அந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கவினை போலீசார் கைது செய்தனர்.
பேக்கரியில் பலகாரம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பேக்கரிக்கு பலகாரம் செய்தபோது கொதிக்கும் எண்ணெய் உடலில் கொட்டியதால் தொழிலாளி உயிரிழந்தார். நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளையை சேர்ந்த 43 வயதாகும் ராம்குமார் என்பவர் தொழிலாளியாவார். இவருக்கு முத்துராணி என்ற மனைவி இருக்கிறார்.
ராம்குமார் மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் பலகாரம் செய்யும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த அன்று ராம்குமார் பேக்கரி உரிமையாளரின் வீட்டில் வைத்து பலகாரங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் எண்ணெய் கொதித்து கொண்டிருந்த பாத்திரத்தை ராம்குமார் தூக்கினாராம்.. அப்போது திடீரென கை தவறி பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெய் ராம்குமாரின் கழுத்துக்கு கீழே கொட்டிவிட்டது.
உடலில் எண்ணெய் கொட்டியதால் வலி தாங்க முடியாமல் ராம்குமார் துடிதுடித்து அலறியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ராம்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications