குமரியில் கல்லூரி மாணவி தற்கொலையில் மர்மம்.. போலீசார் விசாரணை!
கன்னியாகுமரியில் கல்லூரி விடுதியில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கல்லூரி விடுதியில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயின்று வந்தார் மனிஷா(17). கடந்த 15 நாட்களுக்கு முன் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற மனிஷா திரும்பி கல்லூரி வந்து விடுதியில் தங்கியுள்ளார்.

நேற்று காலை சக மாணவிகள் கல்லூரிக்கு செல்ல அழைத்த போது உடல்நிலை சரியில்லை என்று கூறி வகுப்பிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சக விடுதி மாணவர்கள் வகுப்பிற்கு சென்று மாலை விடுதி அறைக்கு சென்றபோது மனிஷா விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் நைலான் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.
இதைக்கண்ட சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவலளித்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின்படி குளச்சல் உட்கோட்ட வெள்ளிச்சந்தை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கிட்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவியின் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடனும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications