கேரளா முழு அடைப்பு: களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பொதுமக்கள் பாதிப்பு
Recommended Video

கன்னியாகுமரி:கேரளா முழு அடைப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்களான கிருபேஷ்,சரத்லால் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி அங்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையத்தோடு நிறுத்த பட்டது.
கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப் படுகின்றன ஆனாலும் காசர்கோடு உட்பட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பேருந்துகள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு நிலவியது.

போராட்டம் காரணமாக பொது மக்கள் இயல்பு வாழ்க்கை ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மட்டுமின்றி மருத்துவமனைக்கு செல்வோரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications