இதை அனுமதிக்க முடியாது.. பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அதிரடி
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் இன்று தேர்தல் ஆணையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் இன்று தேர்தல் ஆணையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கு தமிழக அரசியல்வாதிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கி மிக தீவிரமாக நடத்தி வருகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாஜக சார்பாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

சென்னையில் இருந்து
இதற்காக அவர் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் இன்று தேர்தல் ஆணையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக இந்த வாகனம் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது.

சோதனை செய்யப்பட்டது
எல்.இ.டி பொருத்தப்பட்ட நவீன பிரச்சார வாகனம் ஆகும் இது. இந்த நிலையில் இன்று காலை பிரச்சாரத்திற்கு தயாராகும் வேளையில், தேர்தல் பிரச்சார எல்.இ.டி. வாகனத்தை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஆவணம் இருக்கிறதா
நாகர்கோவிலில் இன்று காலை சோதனை நடந்த போது, இந்த வாகனமும் சோதனை செய்யப்பட்டது.சரியாக பிரச்சாரம் தொடங்குவதற்கு சில நிமிடம் முன் இந்த சோதனை நடைபெற்றது. வாகனத்தில் சரியாக ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.

பறிமுதல்
ஆனால் பிரச்சாரம் செய்வதற்கான உரிய ஆவணங்கள் இதில் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications