வராத புயலுக்குத்தான் எத்தனை அமர்க்களம்.. கடைசியில் மீன் விலை ஏறிப் போனதுதான் மிச்சம்!
ஃபானி புயல் எதிரொலியால் மீன் விலை உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி: வராத புயலுக்கு எவ்ளோ அமர்க்களம்.. கடைசியில் மீன் விலை ஜாஸ்தியானதுதான் மிச்சம்! இதனால மீன்கள் கிடைக்காமல், அப்படியே கிடைச்சாலும் விலை காரணமாக வாங்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர் குமரி மீன் பிரியர்கள்!
கிழக்கு கடற்கரை பகுதியில் இப்போது மீன்கள் இனப்பெருக்க காலம், அதனால் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என தடை போடப்பட்டுள்ளது. இதனால் மீன் வரத்து குறைந்துவிட்டது.

இதனால் கட்டுமரம், வள்ளம் போன்றவற்றை எடுத்து கடலுக்கு செல்லும் மீனவர்கள், என்ன மீன்கள் கிடைக்குமோ அதை கொண்டு வந்து விற்றார்கள். இந்த நிலையில்தான் ஃபானி புயல் வரப்போகிறது, அதனால் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க போக வேண்டாம் என்று எச்சரிக்கை வந்தது. அதனால் மீனவர்களும் 2 நாளாக கடலுக்கு போகவில்லை.
இதனால் மொத்தமாக மீன் வரத்து மேலும் குறைந்தேவிட்டது. காற்று, மழை, புயல் ஒரு பக்கம் இருந்தாலும் மீன் சாப்பிடாமல் சிலருக்கு இருக்க முடியாதே.. அதனால் மீன்களின் தேவையும் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமானதால், விலையும் கூடிவிட்டது.
குறிப்பாக நெய் மீன் ஒரு கிலோ ரூ.800 இருந்தது. இப்போது ரூ.1200 ஆகிவிட்டது. ரூ.400-க்கு விற்ற பாறை மீன் 700 ரூபாயாம். இதுகூட பரவாயில்லை.. ஒரு கூறு நெத்திலி மீன் வெறும் 20 ரூபாய்க்கு தந்தார்கள். இப்போ 50 ரூபாயாம்.
ஒரு பக்கம் மீன்பிடிக்க தடை.. இன்னொரு பக்கம் புயல் அறிவிப்பு.. இதனால் வரத்து குறைந்து, மீன் விலை அதிகமாகி.. கடைசியில நமக்கு மீன் சரியா கிடைக்காம போயிட்டு இருக்கு!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications