கன்னியாகுமரியில் அரசு ஊழியர் போல் வந்த இளம் பெண்.. ஒரே நிமிடம் தான்.. ஆடிப்போன லட்சுமி பாட்டி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். கணவர் வெளியில் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை இளம் பெண் ஒருவர் பார்க்க வந்துள்ளார். அவர் மூதாட்டி லட்சுமியை நலவாரியத்தில் சேர்த்து விடுவதாக கூறி நூதன முறையில் தங்க கம்மலை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். சில நிமிடத்தில் 60 ஆயிரம் மதிப்புள்ள கம்மலை பறிகொடுத்துள்ளார் மூதாட்டி.
சற்று கவனமாக இல்லாவிட்டால், பேச்சுக்கொடுத்தே நகைகளை பறித்து விடுவார்கள். படித்தவர்களிடையே ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மோசடி நடக்கும் நிலையில், படிக்காதவர்கள், வயதானவர்களிடம் நலவாரியம், உதவி தொகை என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியில் 88 வயதாகும் ராமையா வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமிக்கு 75 வயது ஆகிறது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கணவர் வெளியே கடைக்கு சென்ற நேரம் லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது ஒரு பெண் வீட்டுக்கு வந்து ஏதோ தெரிந்தவர் போல் மூதாட்டியிடம் பேசி உள்ளார். அந்த பெண் நல வாரியத்தில் சேர்த்து விடுவதாக கூறி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு தாருங்கள் என அரசு ஊழியர் போல கேட்டுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய லட்சுமி அவர் கேட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார். பின்னர் போட்டோ எடுக்க வேண்டும் என்றும் அப்போது கம்மல் போட்டிருக்க கூடாது கழற்றி வையுங்கள் என்று அந்த பெண் கூறியிருக்கிறார். உடனே லட்சுமி தனது காதில் கிடந்த ½ பவுன் கம்மலை கழற்றி வைத்துள்ளார். தொடர்ந்து போட்டோ எடுத்த அந்த பெண் லட்சுமியிடம், 'எனக்கு பசிக்கிறது, சாப்பாடு இருந்தால் தாருங்கள்' என கேட்டுள்ளார். உடனே லட்சுமி அவருக்கு உணவு கொடுத்திருக்கிறார்.
அந்த பெண் சாப்பிட்ட பின்பு லட்சுமி தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே வைக்க சென்றிருக்கிறார். பின்னர் திரும்பி வந்தபோது அந்த பெண்ணை காணவில்லை. அத்துடன் லட்சுமி கழற்றி வைத்த ½ பவுன் கம்மல் மாயமாகியிருந்தது. அந்த பெண் கம்மலை எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து லட்சுமி அந்த பெண்ணை சுற்றுப்பகுதியில் தேடினார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி கணவர் வந்ததும் அவரிடம் நடந்ததை கூறினார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மூதாட்டியிடம் நூதன முறையில் ½ பவுன் கம்மலை அபேஸ் செய்த மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். நலவாரியத்தில் சேர்ப்பதாக கூறி மூதாட்டியிடம் ½ பவுன் கம்மலை அபேஸ் செய்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications