நாகர்கோவில் அருகே தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகள்.. சிக்கியது எப்படி? பரபரப்பு வாக்குமூலம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தையை மகளே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு நாடகமாடியது பிரேத பரிசோதனையில் அம்பலமாகி உள்ளது. எதற்காக அப்படி செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்த 46 வயதாகும் சுரேஷ்குமார் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். சுரேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமாரை விட்டு அவருடைய மனைவி பிரிந்துவிட்டார். கையோடு தனது இளைய மகளையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார்

இதனிடையே மூத்த மகளான 21 வயதாகும் ஆர்த்தி மட்டும் தனது தந்தையான சுரேஷ்குமாருடன் தங்கினார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி சுரேஷ்குமார் வீட்டில் அதிகமாக மது குடித்து விட்டு இறந்து கிடப்பதாக இளம் பெண் ஆர்த்தி, பூதப்பாண்டி போலீசாருக்கு அழைத்து தெரிவித்தார்.
உடனே கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து சுரேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த போது தலையில் காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் முடிவு செய்தனர். முதலில் போலீசாருக்கு சுரேஷ்குமார் மகள் ஆர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது.
அந்த கோணத்தில் விசாரித்த போது ஆர்த்தி தான் தந்தையை கொன்று விட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. ஆரம்ப கட்ட விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவலை ஆர்த்தி தெரிவித்ததார். இறுதியாக தந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் தந்தையை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக ஆர்த்தி போலீசில் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் தெரிவித்த தகவலை போலீசார் கூறுகையில், ஆர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் தினமும் மதுகுடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் தாயார் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். ஆனாலும் தனது தந்தையுடன் ஆர்த்தி வசித்து வந்துள்ளார். மதுகுடித்து விட்டால் அவரது தந்தை சகட்டுமேனிக்கு தகாத வார்த்தைகளை பேசுவாராம்.
அப்படித்தான் சம்பவம் நடந்த அன்று அதே மாதிரி ஆர்த்தியிடம் பேசியதுடன் தாக்கவும் முயன்றாராம். இதனால் ஆத்திரத்தில் அவரை தள்ளி விட்ட ஆர்த்தி, அங்கு கிடந்த கட்டையால் தலையில் தாக்கி உள்ளார். எனினும் அவர் ஆர்த்தியை திட்டிக்கொண்டே இருந்தாராம். இதனால் அவரை பேச விடாமல் ஆர்த்தி கழுத்தை நெரித்துள்ளார். இதில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்து விட்டாராம். பின்னர் அவர் இறந்தது தெரியவந்தது. இந்த கொலையை மறைக்க, தந்தை அதிகமாக மது குடித்துவிட்டு இறந்து விட்டதாக நாடகமாடி உள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், போலீசாரின் விசாரணையால் மாட்டிக் கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications