நிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ!
ரோபோ ஒன்றை நடப்பாண்டில் சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி: ரோபோ ஒன்றை நடப்பாண்டில் சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தியா சந்திரனில் மனிதனை அனுப்புவதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக 2021 இறுதியில் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.
இதற்கு மத்தியில் சந்திரன் தொடர்பான ஆய்வுகளையும் தனியாக இஸ்ரோ செய்ய உள்ளது. அதன் ஒருபடியாக சந்திரனுக்கு ரோபோ ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

பேட்டி அளித்தார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ. சிவதாணுபிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், உலக நாடுகளின் பட்டியலில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவுவதில் இந்தியா இன்று 4வது இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா அதில் மேலும் முன்னேறும்.

அரியவகை மூலப்பொருள்
தற்போது சந்திரனில் மனிதனை அனுப்புவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. விரைவில் இந்த பணிகள் வேகம் எடுக்கும். அதன் முயற்ச்சியாக விரைவில் ரோபோ ஒன்று அனுப்பபடுகிறது. இந்த வருடம் இந்த பணிகள் முடிவடையும்.

ஏன் தெரியுமா
தற்போது நடைபெற்றுவரும் ஆய்வில் சந்திரனில் ஹீலியம் வாய்வு அதிகமாக காணப்படுகிறது. இது அரிய வகை மூல பொருளாகும் என தகவல் கிடைத்திருக்கிறது. ஒரு கிராம் ஹீலியம் வாயு 1000, யுரோனியத்திற்கு சமமானதாகும் ஹீலியம் கதிர்வீச்சற்றது. இது பல வகைகளில் மக்களுக்கு பயன்படும். அதனால் பாதுகாப்பானதாகும்.

வரும்
அதனை சந்திரனில் இருந்து கொண்டுவர இங்கிருந்து ரோபா ஒன்றை சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது. அங்கிருந்து ஹீலியமை சேகரித்து இது பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வரும். அதை இஸ்ரோ ஆராய்ச்சி செய்யும். அதன் பின் மனிதனை சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் இஸ்ரோ செயல்படும். இதில் நாம் ரஷ்யாவோடு இணைந்து செய்லபடுவோம்.

ரஷ்யா உடன்
நம்மால் உருவாக்கப்பட்ட ப்ரோமஸ் ஏவுகணை உலகிலேயே அதிகம் வேகம் கொண்டது.தற்போது அதை விட ஏழு மடங்கு வேகம் அதிகம் கொண்ட மணிக்கு 7 ஆயிரம் கி,மீ வேகம் கொண்ட ஏவுகணை தயாரிக்கும் பணிகளில் தீவீரமாக ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அது குறித்து தெரிவிக்கப்படும். அந்தவகையில் இந்தியா செயற்கைக்கோள் செலுத்துவதில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்று உள்ளது என்று அவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications