Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி அரசு ஊழியர் வளர்மதி.. பத்மநாபபுரம் நகராட்சியில் பல லட்சங்கள் மாயம்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த வளர்மதி 2022-ம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அவரிடம் காசாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நகராட்சியின் வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்த போது, வரிவசூல் மையத்தில் பணம் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர் மொத்தம் 12.50 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வளர்மதி, இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து மனைவி வளர்மதி கருணை அடிப்படையில் 2022-ம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் காசாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது.

Kanyakumari Padmanabhapuram Cashier Arrested for 12 5 Lakh Embezzlement

இதையடுத்து வளர்மதி 2023-2024-ம் நிதி ஆண்டில் நகராட்சி கணினி வசூல் மையத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் தினசரி வசூலாகும் பணத்தை நகராட்சி வங்கி கணக்கில் செலுத்தாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதி பணத்தை கையாடல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நகராட்சி வரி வசூல்

இந்தநிலையில் கடந்த ஆண்டு நகராட்சியின் வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது வரிவசூல் மையத்தில் பணம் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து முதல்கட்டமாக கடந்த நவம்பர் மாதம் வளர்மதி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

12.63 லட்சம் கையாடல்

தொடர்ந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ரூ.12 லட்சத்து 63 ஆயிரத்து 395 -யை வளர்மதி கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசில் புகார்

இதுகுறித்து பத்மநாபபுரம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் நேற்று தக்கலை போலீசில் வளர்மதி மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வளர்மதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பதமநாபபுரம் நகராட்சியில் ரூ.12½ லட்சம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+