கன்னியாகுமரி பெண்களுக்கு லைசென்ஸ் இருந்தாலே மின்சார ஆட்டோ.. 2 ஏக்கர் விவசாய நிலம்.. கடன் உதவிகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலம் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர் 25 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என கலெக்டர் அழகு மீனா அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலம் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதற்காக விண்ணப்பதாரர் 25 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 10 சதவீதம். தகுதியுடையவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் இருந்து பெறப்பட்ட விலைபடிவ பட்டியல், பான்கார்டு, ஆதார்கார்டு, ரேஷன் கார்டு, கடன் உறுதி ஆவணம் மற்றும் வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் தங்களுக்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
2 ஏக்கர் விவசாய நிலம்
இதுபோல் கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலம் நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் ஆகும். சொத்தின் மதிப்பில் 65 சதவீதம் வரை அதிகபட்சம் ரூ.5 லட்சம் (2 ஏக்கர் வரை மட்டுமே) வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிக்கு 10 சதவீதம் ஆகும்.
தகுதியுடைய ஏழை பெண் விவசாயத் தொழிலாளர்கள் கடன் விண்ணப்பத்துடன் தங்களுக்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
சுய உதவிக்குழுக்கள்
மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்பு குழுக்கள் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாகக் கடனுதவியாக திட்ட செலவில் 90 சதவீதம் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் அளவில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடன் பெறுவதற்கான தகுதிகளாக செயல் திட்டத்தின் குறைந்த பட்ச மூலதனம் ரூ.5 லட்சமாக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் தங்களுக்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications