கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கன்னியாகுமரி அறிவிப்பு.. களியக்காவிளை எல்லையை மூடியது கேரளா
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியை கேரள அரசு மூடியுள்ளது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 16 ஆக இருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாக கன்னியாகுமரியும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசு அறிவித்தது அதாவது கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய மாவட்டமாக அறிவித்தது.

அனுமதி மறுப்பு
இதையடுத்து தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியை கேரள அரசு மூடியிருக்கிறது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள அதிகாரிகள் மருத்துவம், வங்கி ஊழியர்கள், காய்கறி, பால், உணவுப் பொருள்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை மட்டுமே அனுமதித்து வந்தார்கள்.

கலெக்டர் பாஸ்க்கு அனுமதியில்லை
எனினும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறி, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர். மற்றபடி எதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாஸ் வாங்கிச் செல்பவர்களுக்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை.

கொரோனா ஹாட்ஸ்பாட்
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்க புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை செல்பவர்கள் செல்ல முடியாமல் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். இதுபற்றி வளிக்கம் அளித்த கேரள அமைச்சர் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடவடிக்கை எடுப்பாரா
விரைவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக மக்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்டத்தில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த கேரளாவில் இன்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்புகள் அங்கு தினசரி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications