மருத்துவம் இன்று காஸ்ட்லியாக மாறி வருகிறது! இது நல்லதல்ல! தமிமுன் அன்சாரி வேதனை!
கன்னியாகுமரி: மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற இயற்கை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும் அந்த விழாவில் அவர் பேசியதாவது;

மருத்துவ சேவை
மருத்துவ சேவை என்பது உயர்வானது. மனிதாபிமானம் நிறைந்தது. இதில் கருணையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியுள்ளது. இதை கருத்தில் கொண்டு எளியவர்களுக்கு நீங்கள் கனிவுடன் பணியாற்ற வேண்டும்.

வருமான நோக்கம்
வணிக நோக்கமும், வருமான நோக்கமும் தவறில்லை. ஆனால் அது நோயாளிகளை சுரண்டும் விதமாக இருக்கக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரத்தை, வருமானத்தை பாதிப்பதாகவும் இருக்கக் கூடாது. சென்னையில் டாக்டர் சேப்பன் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். அவர் இந்திய குடியரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

பத்து ரூபாயில் மருத்துவம்
அவரைத் தேடி வரும் நோயாளிகளுக்கு பத்து ரூபாயில் மருத்துவம் பார்த்தார். அவரது மருத்துவ சேவை உயர்வானதாக இருந்தது.சென்னை அருகே ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த ஒரு மருத்துவர் இறந்த போது, அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததாக கருதி துடித்துப் போனதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நீங்கள் சேவையாற்ற வேண்டும்.

குடிபோதையில் சீரழிவு
நாம் அனைவரும் இணைந்து, மக்கள் குடிபோதையில் சீரழிவதை தடுக்க வேண்டும். நான் சட்டசபையில் பணியாற்றிய போது, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பலமுறை பேசியுள்ளேன் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.பண்டிகை காலங்களில் டாஸ்மாக் வருமானம் பெருகுவதை பெருமையாக கருதக்கூடாது. சென்ற பண்டிகையை விட, இந்த பண்டிகையில் கூடுதல் விற்பனை என்பது நல்ல செய்தி அல்ல. மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதை புரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications