கன்னியாகுமரியின் கனவு சார்.. திருநெல்வேலிக்கு அல்வாவை விட இனிப்பான செய்தி.. தெற்கு ரயில்வே செம்ம
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தியை தெற்கு ரயில்வே கூறியிருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நாகர்கோவில்- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதையில் விரைவில் வெள்ளோட்டம் நடைபெற போகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளை தீவிரமாக்கி உள்ளது தெற்கு ரயில்வே..
இந்தியாவின் ரயில் போக்குவரத்து கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. எந்த ஊரில் ரயில், விமானம் உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியாக உள்ளதோ அந்த ஊர் பெரிய அளவில் பொருளாதார ரீதியாக முன்னேறுகிறது. இதில் குறிப்பாக ரயில் கட்டமைப்பு என்பது இந்தியாவிற்குள் எங்கு வேண்டும் என்றாலும் சரக்குகளை எடுத்து செல்லவும் ,பயணிக்கவும் முடியும். அந்த ஊருக்கு மிகப்பெரிய நன்மை தரக்கூடியதாக ரயில் பாதை இருக்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். கன்னியாகுமரி தொடங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை முக்கியமான ரயில் பாதை இருக்கிறது. இந்த பாதை சென்னை உடன் முடியாது. டெல்லி வரைக்கும், கொல்கத்தா வரைக்கும், மும்பை வரைக்கும், ஏன் காஷ்மீர் வரைக்குமே செல்கிறது.
தமிழ்நாட்டில் தென்மாவட்ட மக்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கிலோ மீட்டர் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை பணிகள் 2 திட்டங்களாக நடந்து வருகிறது. மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி இடையே 159 கிலோ மீட்டர் தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி- நெல்லை- நாகர்கோவில் 102 கிலோ மீட்டர் ஒரு திட்டமாகவும் தெற்கு ரயில்வே செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்துவிட்டது. கடந்த மாதம் நாகர்கோவில்- ஆரல்வாய்மொழி வரை கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது. இதேபோல் மேலப்பாளையத்திலும் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்ததால் அங்கு இன்று வெள்ளோட்டம் நடந்துள்ளது. இதன் மூலம் நாகர்கோவில்- திருநெல்வேலி வரை இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிந்துள்ளதால் விரைவில் இந்த வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.. அப்படி வந்தால், கூடுதல் ரயில்களை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இயக்க முடியும்.
இதனிடையே நாகர்கோவில்- கன்னியாகுமாி மற்றும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையிலான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தண்டவாளம் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒழுகினசேரி பாலம் அருகே பணிகள் முடிந்தால் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் வாய்ப்பு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications