Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியின் கனவு சார்.. திருநெல்வேலிக்கு அல்வாவை விட இனிப்பான செய்தி.. தெற்கு ரயில்வே செம்ம

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தியை தெற்கு ரயில்வே கூறியிருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நாகர்கோவில்- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதையில் விரைவில் வெள்ளோட்டம் நடைபெற போகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளை தீவிரமாக்கி உள்ளது தெற்கு ரயில்வே..

இந்தியாவின் ரயில் போக்குவரத்து கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. எந்த ஊரில் ரயில், விமானம் உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியாக உள்ளதோ அந்த ஊர் பெரிய அளவில் பொருளாதார ரீதியாக முன்னேறுகிறது. இதில் குறிப்பாக ரயில் கட்டமைப்பு என்பது இந்தியாவிற்குள் எங்கு வேண்டும் என்றாலும் சரக்குகளை எடுத்து செல்லவும் ,பயணிக்கவும் முடியும். அந்த ஊருக்கு மிகப்பெரிய நன்மை தரக்கூடியதாக ரயில் பாதை இருக்கும்.

Nagercoil-Kanyakumari double rail line : Southern Railway Major Good News

அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். கன்னியாகுமரி தொடங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை முக்கியமான ரயில் பாதை இருக்கிறது. இந்த பாதை சென்னை உடன் முடியாது. டெல்லி வரைக்கும், கொல்கத்தா வரைக்கும், மும்பை வரைக்கும், ஏன் காஷ்மீர் வரைக்குமே செல்கிறது.

தமிழ்நாட்டில் தென்மாவட்ட மக்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கிலோ மீட்டர் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை பணிகள் 2 திட்டங்களாக நடந்து வருகிறது. மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி இடையே 159 கிலோ மீட்டர் தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி- நெல்லை- நாகர்கோவில் 102 கிலோ மீட்டர் ஒரு திட்டமாகவும் தெற்கு ரயில்வே செயல்படுத்தப்படுகிறது.

தற்போது நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்துவிட்டது. கடந்த மாதம் நாகர்கோவில்- ஆரல்வாய்மொழி வரை கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது. இதேபோல் மேலப்பாளையத்திலும் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்ததால் அங்கு இன்று வெள்ளோட்டம் நடந்துள்ளது. இதன் மூலம் நாகர்கோவில்- திருநெல்வேலி வரை இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிந்துள்ளதால் விரைவில் இந்த வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.. அப்படி வந்தால், கூடுதல் ரயில்களை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இயக்க முடியும்.

இதனிடையே நாகர்கோவில்- கன்னியாகுமாி மற்றும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையிலான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தண்டவாளம் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒழுகினசேரி பாலம் அருகே பணிகள் முடிந்தால் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+