Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி ஹோட்டலில் கூகுள் பேயில் பணம்.. இப்படி கூட மோசடி செய்ய முடியும்.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே ஹோட்டலில் சாப்பிட்ட உணவிற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவது போல் நாடகமாடிய நபர்களிடம் இருந்து கணக்கில் பணம் வரவில்லை.. பணத்தை கேட்ட ஊழியரை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்கள் இரண்டு பேர். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் பேயில் பணம் வாங்குகிறீர்கள் என்றால் , டிக் வருகிறது என்று நம்பி ஓகே சொல்லாதீர்கள். உங்களை ஏமாற்றிவிட்டு, எஸ்கேப் ஆக வாய்ப்பு உள்ளது. உங்களிடம் வாய்ஸில் சொல்லும் மிஷின் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி மிஷின் இருந்தால் மட்டுமே உங்களை ஏமாற்ற முடியாது. அதேபோல் உங்களிடம் மெஷின் வேலை செய்யவில்லை என்றால், உடனே நீங்க செல்போனில் மெசேஜ் வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் தற்போது கூகுள் பேயில் நூதனமான முறையில் மோசடி நடக்கிறது. எனவே கவனமாக இல்லாவிட்டால் பணத்தை இழந்துவிடுவீர்கள். நிறைய கூட்டம் வரும் இடங்களில் தான் இப்படியான மோசடிகள் நடக்கிறது. குறிப்பாக உணவகங்களில் அதிகம் ஏமாற்றுகிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஷாக்கீர் இவர் கடையால் சந்திப்பு பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீப காலமாக ஷக்கீருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹோட்டல் ஊழியர்கள் கடையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி இரண்டு இளைஞர்கள் ஹோட்டலுக்கு வந்து உணவு சாப்பிட்டு உள்ளனர். தொடர்ந்து சாப்பிட்ட உணவிற்க்கான பணத்தை கூகுல் பே மூலம் செலுத்துவதாக கூறி நாடகமாடி உள்ளனர்.'

New scam in Kanyakumari hotel payment on Google Pay The twist given by the public

ஆனால் அவர்கள் செலுத்தியதாக கூறிய பணம் ஹோட்டல் கணக்கில் வராததால் கடை ஊழியர்கள் மாஹின் சாப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாஹினை அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குவளையை எடுத்து விரட்டி விரட்டி தாக்கி உள்ளனர். இதில் தப்பி வெளியே ஓடிய மாஹீன் சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்து எழும்பி ஓடிய பின்னும் வாலிபர்கள் அவரை விடாமல் துரத்தி துரத்தி விரட்டி சென்று தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் பிடித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையாலுமூடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களையும் பிடித்து சென்று காவல்நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில் இருவரும் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஷிபு 28, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜில் 31, என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் மாஹீனை விரட்டி சென்று தாக்கிபோது, வெளியே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் விஜித் காலில் அடிபட்டதை தொடர்ந்து அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், ஷிபுவை சிறையிலும் அடைத்தனர். இந்த நிலையில் தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+