நாளை குமரி வருகிறார் பிரதமர் மோடி… 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாளை குமரி வருகிறார் பிரதமர் மோடி..வீடியோ

    குமரி: பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வரை உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்திலுள்ள ஹெலிபேட் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் வைத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திலும் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    pm narendra modi comes to kanyakumari 5 thousand police concentration

    இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளும் தற்போது இந்த மைதானத்திற்கு அவ்வப்போது வந்து அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


    மேலும் விழா நடைபெறும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் பகுதி முழுவதும் எஸ்.பி.ஜி போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு ஐந்து அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் தனி நபர்கள், வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    pm narendra modi comes to kanyakumari 5 thousand police concentration

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று மற்றும் நாளை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் விழாவிற்கு வருகை தரும் பிரதமர் அவர்கள் குமரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் முடிக்க பட்டுள்ள .பார்வதிபுறம் ,மார்த்தாண்டம் மேம்பாலங்களை திறந்து வைக்க உள்ளார் .


    அதே போன்று சுமார் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார் .மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதல்வர் ஓ .பன்னீர் செல்வம் , ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+