மேடம்.. கேப்டன் எப்படி இருக்கார்.. முதல்ல அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?".. துளைத்தெடுத்த மக்கள்

விஜயகாந்த் குறித்து பிரேமலதாவிடம் அஞ்சு கிராம மக்கள் விசாரித்தனர்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: "மேடம்.. கேப்டன் எப்படி இருக்காரு.. நல்லா இருக்காரா?" என்று அஞ்சுகிராம மக்கள் பிரேமலதாவை துளைத்தெடுத்து விட்டார்கள்!

நேற்று கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி அஞ்சுகிராமம் என்ற பகுதிக்குள் பிரேமலதா வாக்கு சேகரிக்க சென்றார்.

அப்போது அங்கிருந்த மக்கள், பிரேமலதாவை சூழ்ந்து கொண்டனர். "மேடம்.. முதல்ல கேப்டன் எப்படி இருக்கார்.. அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?" என்று ஆர்வத்துடன் கேட்டனர்.

Premalatha campaigned in Anjugiramam

இதை கேட்டு பூரித்து போன பிரேமலதாவோ, "கேப்டன் சூப்பரா இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் உங்க முன்னாடி வருவார். இப்பதான்.. 5 நிமிஷத்துக்கு முன்னாடி கூட அவர்கிட்ட செல்போனில் பேசினேன். இப்போ பிரச்சாரத்துக்கு எங்க போக போறேன்னு கேட்டாரு. நான் அஞ்சுகிராமத்துக்கு போறேன்னு சொன்னேன். அதுக்கு கேப்டன், அஞ்சுகிராமமா.. அங்க எல்லாரையும் நான் ரொம்ப கேட்டதாக சொல்லுன்னு என்கிட்ட சொன்னார்" என்றார்.

இதைக்கேட்டதும் கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகுதான் பிரேமலதா பிரச்சாரத்தையே ஆரம்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+