கிறிஸ்துமஸ் தினத்தன்று கன்னியாகுமரி வருகிறார் ஜனாதிபதி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 25-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 25-ம் தேதி இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 26-ம் தேதி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி
விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரிக்கு வருகிறார்.

2 நாள் பயணம்
கன்னியாகுமரியில் 25-ம் தேதி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அரசு விருந்தினர் மாளிகையில் அன்றிரவு தங்கும் ராம்நாத் கோவிந்த், அடுத்தநாள் 26-ம் தேதி காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

கண்காணிப்பு
குடியரசுத் தலைவரின் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் இன்றே கன்னியாகுமரிக்கு வந்துவிட்டனர். ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைஎறும் இடம், தங்கக்கூடிய இடங்களில் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கான உதவியை மாவட்ட எஸ்.பி, ஸ்ரீநாத் செய்துகொடுத்து வருகிறார்.

விவேகானந்தர் மண்டபம்
இதனிடையே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஜனாதிபதி பார்வையிட உள்ளதால் சுற்றுலாப்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குமரிக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications