ஹனிமூன் சென்ற இடத்தில் நண்டு குழம்பு சாப்பிட்ட புதுமணப் பெண் பலி.. ரிசார்ட்டில் நடந்தது என்ன?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஹனிமூன் சென்ற புதுமணப் பெண் நண்டு குழம்பு சாப்பிட்டதும் பலியான நிலையில் அப்போது நடந்தது என்ன என்பது குறித்து அந்த ரிசார்ட் மேனேஜர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி கிருபா (25).

இவர்கள் இருவரும் கன்னியாகுமரியில் தமிழக கேரள எல்லையில் நெட்டா பகுதியில் உள்ள சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள விடுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தேனிலவுக்காக வந்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தினேஷ் குமாரும் கிருபாவும் சாப்பிட்டுள்ளனர், அப்போது புதுப்பெண் கிருபாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தன்னிடம் வைத்திருந்த மருந்துகளை கிருபா சாப்பிட்டுள்ளார்.
எனினும் கிருபாவுக்கு மூச்சுத்திணறல் சரியாகவில்லை. சிறிது நேரத்தில் அவருடைய நிலைமை மிகவும் மோசமடைந்ததால் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுகுறித்து கடையாலுமூடு காவல் துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தப்படுகிறது.
கிருபாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் புதுமணப்பெண் உயிரிழந்தது குறித்து பத்பநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். தேனிலவுக்காக வந்த இடத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிருபாவின் உடலை பார்த்து அவரது கணவரும் உறவினர்களும் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து ரிசார்ட் மேலாளர் கூறுகையில் புதுமண தம்பதியர் அன்றைய தினம் மதிய உணவை அவர்களது அறைக்கே கொண்டு வருமாறு கூறினர். அவர்கள் ஆர்டர் சொன்ன உணவுகளையே ரூம் பாய் கொண்டு போய் கொடுத்தார். அப்போது நண்டு குழம்பை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனே கையில் இருந்த மருந்துகளை சாப்பிட்டார். ஆனாலும் மூச்சுத்திணறல் நிற்கவில்லை. இதையடுத்து சில மணி நேரம் கழித்துதான் அந்த பெண்ணின் கணவர் எங்களிடம் வந்து தகவலை சொன்னார். உடனே குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அந்த பெண் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் கையில் இருந்த மருந்துகளை சாப்பிடாமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் கிருபாவை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் சொன்னதாக ஓட்டல் மேலாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த கிருபாவின் பெற்றோர் மகளின் இறப்பு குறித்து பேச மறுத்துவிட்டனர். அந்த பெண்ணுக்கு மூச்சிறைப்பு நோய் இருந்ததாகவும் அதற்காக அவர் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கிருபாவின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications