நாங்க ஜங்ஷனை ஜப்தி பண்ணப் போறோம்.. கரூரை அதிர வைத்த கோர்ட் ஊழியர்கள்!
கரூர்: கரூர் ரயில் நிலையத்தை நீதிமன்ற அமினாவுடன் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு கரூர் - சேலம் இடையிலான அகல ரயில் பாதை திட்டத்திற்கு 4 நபர்களிடமிருந்து 2.50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கருர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2010 ஆம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அளித்தும், முறையான பதில் நடவடிக்கை இல்லாததால் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று நீதிமன்ற அமீனாவுடன் கரூர் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வழக்கறிஞர்கள் வந்ததால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாத இறுதிக்குள் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டு தொகை வழங்குவதாக ரயில்வே உயரதிகாரிகள் ஒப்புக் கொண்டதின் பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிட்டனர்.
கரூர் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் அமீனாவுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எந்தவிதமான ஜப்தியும் இல்லாமல் போனதால் பரபரப்பு அடங்கியது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications