கரூர் புதிய சொகுசு பங்களாவின் ஆவணங்களுடன் ஆஜராகுங்கள்! செந்தில் பாலாஜியின் தம்பி மனைவிக்கு ED சம்மன்
கரூர்: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர்- சேலம் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் பல கோடி மதிப்பில் சொகுசு பங்களா கட்டப்பட்டு வருகிறது.

இந்த சொகுசு பங்களா கட்ட நிலம் வாங்கியதில் மோசடி இருப்பதாகவும் இங்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம 26ஆம் தேதி வருமான வரித் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது தம்பி அசோக்குமார் மனைவி பெயரில் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அசோக் குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்த வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக அசோக்குார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இருந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களாக அவரிடம் நடத்தி வரும் விசாரணையில் இன்றைய தினம் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் 2 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கடந்த முறை வருமான வரித் துறையினரின் சோதனையின் போது நடந்ததை போல் பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் துணை ராணுவப் படை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களும் உடன் வந்தனர். பொறியாளர்கள் மூலம் கட்டடத்தை மதிப்பிடும் பணிகள் நடந்தன.
கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அசோக்குமாரின் ஆடிட்டர் சதீஷ் குமார் அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டிவிட்டு வந்தனர். அது போல் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக்குமார் வீட்டுக்கு அமலாக்கத் துறையினர் சென்றனர்.
அங்கு யாரும் இல்லாததால் ராம் நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் ஆவணங்களுடன் விசாரணைக்கு அசோக்குமாரின் மனைவி நிர்மலா ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதே நேரம் ராம்நகரில் உள்ள புதிய பங்களாவில் சோதனை நடந்த வண்ணம் உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications