சீமான் மீது 2 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு.. கருணாநிதி பற்றி அவதூறு பாடல் பாடியதால் கரூர் போலீஸ் அதிரடி
கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியது தொடர்பான புகாரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூர் மாவட்டம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இவர் பிரசார மேடைகள் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் திமுக கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இந்த பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பாடல் ஒன்றை பாடினார். இது சர்ச்சையை கிளப்பியது.
சாட்டை துரைமுருகன் மீது புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலையானார். இதன் தொடர்ச்சியாக சீமான் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சாட்டை முருகனுக்கு ஆதரவாக பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர் சந்திப்பில், கருணாநிதி பற்றி சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை பாடியதோடு, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விட்டார்.
இதையடுத்து சீமான் மீது திமுகவினர் தொடர்ந்து பல போலீஸ் நிலையங்களில் புகாரளித்தனர். அதேபோல் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கரூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் சீமானுக்கு எதிராக புகாரளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீதான புகார் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடந்த அக்டோபர் 14ம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் தான் சீமான் மீது தாந்தோணிமலை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சீமான் மீது மொத்தம் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications