Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் மீது 2 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு.. கருணாநிதி பற்றி அவதூறு பாடல் பாடியதால் கரூர் போலீஸ் அதிரடி

Subscribe to Oneindia Tamil

கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியது தொடர்பான புகாரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூர் மாவட்டம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இவர் பிரசார மேடைகள் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் திமுக கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

seeman ntk karunanidhi

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இந்த பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பாடல் ஒன்றை பாடினார். இது சர்ச்சையை கிளப்பியது.

சாட்டை துரைமுருகன் மீது புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலையானார். இதன் தொடர்ச்சியாக சீமான் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சாட்டை முருகனுக்கு ஆதரவாக பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர் சந்திப்பில், கருணாநிதி பற்றி சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை பாடியதோடு, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விட்டார்.

இதையடுத்து சீமான் மீது திமுகவினர் தொடர்ந்து பல போலீஸ் நிலையங்களில் புகாரளித்தனர். அதேபோல் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கரூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் சீமானுக்கு எதிராக புகாரளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீதான புகார் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடந்த அக்டோபர் 14ம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் தான் சீமான் மீது தாந்தோணிமலை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சீமான் மீது மொத்தம் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+