10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன்... சவாலுக்கு முதல்வர் தயாரா?... துரைமுருகன் பேச்சு
அரவக்குறிச்சி: 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 18 ம் தேதி, மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்பதால், வீதி,வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் செய்ய ஒன்றும் இல்லை... நல்லகண்ணு விவகாரத்தில் சரத்குமார் கருத்து
பெண்கள் அதிகம்
இந்தநிலையில், வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளதை பார்க்கும்போதே நமக்கு வெற்றி உறுதி என்பது தெரிகிறது என்றார்.
நீங்கள் என்ன மந்திரியா?
இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும் போது, வீடற்ற 25 ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார். நீங்கள் என்ன மந்திரியான்னு கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார்.
பாடம் படிக்கனும்
மக்களுக்கு செய்ய வேண்டிய மந்திரிகளே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கனும் போல் உள்ளது. அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை தி.மு.க.விற்கு அழைத்து வந்து விட்டோம். கருணாநிதி இலவச மின்சாரத்தை தந்தார். அதை ஜெயலலிதா ரத்து செய்ய முயற்சித்தபோது நாங்கள் போராடி அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம்.
கோபம் வருகிறது.
துரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது.
முதல்வருக்கு சவால்
இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம் என்றும் கூறினார்.