திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!
கரூர்: கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி. தியாகராஜனின் ஜவுளி நிறுவனத்தில் ஐ.டி அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். தியாகராஜனுக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூர் சட்டமன்றத் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கரூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் ஆசி. எம். தியாகராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெக சார்பில் மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி. தியாகராஜனின் ஜவுளி நிறுவனத்தில் ஐ.டி அதிகாரிகள் இன்று அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். தியாகராஜனுக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இது கரூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
65 வயதான ஆசி. தியாகராஜன் கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்ட படிப்பு முடித்த இவர், விவசாய மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். கரூர் தான்தோன்றிமலை வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், உப்பிடமங்கலம் விவசாயிகள் நுண்ணுயிர் நீரேற்று பாசன சங்கத் தலைவராக உள்ளார்.












Click it and Unblock the Notifications