கரூரில் கணவன், மனைவி மீது அப்படியே கான்கிரீட் கலவையை ஊத்திய ஒப்பந்ததாரர்.. ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையைக் கொட்டிய செயலால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. இங்கு சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெஜெ நகர் குடியிருப்பு பகுதியில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கட்ட பள்ளம் தோண்டி இருக்கிறார்கள்.

karur: a contractor poured concrete mixture on a protesting husband and wife who descended into a sewage drainage

இதனால் அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் விரிசல் விட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒப்பந்ததாரரிடமும், நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த வீட்டின் படுக்கை அறை சமையல் அறை, ஹால் உள்ளிட்ட இடங்களில் இரும்பு ஜாக்கியை கொண்டு முட்டு கொடுத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சாக்கடைக்கும், அவர்களது பக்கவாட்டு சுவருக்கும் உள்ள இடைவெளியில் காங்கிரிட் போட வேண்டும் என்றால் 43 ஆயிரம் கொடுத்தால் தான் போடுவோம் என ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலையை கிடப்பில் போட்டு விட்டுச் சென்ற நிலையில், அப்பகுதி பொதுமக்கள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்றும், பணிகளை முடிக்காததால் வீடுகளுக்குச் செல்லவும், வீட்டு கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அங்கு வந்த கவுன்சிலர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்படி ஒப்பந்ததாரை அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டதை அடுத்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

karur: a contractor poured concrete mixture on a protesting husband and wife who descended into a sewage drainage

இந்த நிலையில் இன்று கான்கிரீட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. பாதிக்கப்பட்டவர் வீட்டின் முன்பு பணம் கொடுக்காமல் காங்கிரிட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறியிருக்கிறார். இடிந்த வீட்டின் சுவரை கட்ட தம்பதியிடம் ரூ.43,000 நிதி கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர்களான பாலச்சந்தர் மற்றும் கோமதி தம்பதிகள் இருவரும் கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராடினார்கள்.

அதனை பொருட்படுத்தாமல் கோபத்தில் ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஆனது.இதனிடையே கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையைக் கொட்டும் வீடியோ வெளியானதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+