கரூர் திமுக கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோதிமணி.. 'விருந்துக்கா வந்திருக்கேன்..''என ஆவேசம்!
கரூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக-வினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடந்தது.

கூட்டணி
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

ஜோதிமணி
கூட்டத்தில் இருந்து தொடர்ந்து வெளியேறிய ஜோதிமணி பேச்சுவார்த்தையின்போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். அப்போது, ''உங்க ஆபீசுக்கு நான் வந்துருக்கேன், என்னை எப்படி வெளியே போன்னு சொல்லுவீங்க.. உங்க வீட்டுக்கா வந்துருக்கேன். என்னை எப்படி வெளியே போன்னு சொல்லுவாங்க. நீங்க தான கூப்டீங்க..கூட்டணி பேச்சு வார்த்தைக்கு தான வந்திருக்கேன். நான் என்ன விருந்துக்கா வந்திருக்கேன். வெளியே போக சொல்ல இவங்க யாரு..இதான் கூட்டணி தர்மமா'' என்று அங்கிருந்தவர்களைக் கேள்விக் கேட்டுக்கொண்டே அங்கிருந்து வெளியேறினார் கரூர் எம்.பி ஜோதிமணி.

கருத்து மோதல்
ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கரூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார் ஜோதிமணி.

செந்தில் பாலாஜி பங்கேற்ற கூட்டம்
இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற கூட்டத்தில் இருந்து ஜோதிமணி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எம்பி ஜோதிமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications