செந்தில் பாலாஜி போட்ட விதை.. கேப்சூலாக வெளிநாடு பறக்கும் கரூர் ‘முருங்கை’.. விவசாயிகள் செம ஹேப்பி!
கரூர்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றப்பட உள்ளது. முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022ல் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று நடத்திய முருங்கை கண்காட்சி மூலம் இன்றைய முதலீட்டுக்கு விதை போடப்பட்டதாக கூறுகின்றனர் கரூர் மாவட்ட மக்கள்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, மூலனூர் முருங்கை என பல்வேறு வகை முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதை விதைத்தும், முருங்கைக் கன்று நட்டு வைத்தும் முருங்கை உற்பத்தி கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முருங்கை சாகுபடியே வாழ்வாதாரமாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் சீசன்களில் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கரூர் முருங்கை விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து முருங்கை இலையை பதப்படுத்தி கேப்சூல் வடிவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு காரணமாக இருந்தார். அவரே, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுத்து கரூரில் முருங்கை கண்காட்சி நடைபெறச் செய்தார்.
இந்த முருங்கை கண்காட்சியில் நூற்றுக்கணக்கான முருங்கை விவசாயிகளும், பிரேசில், ஜெபர் கஸ்பர், ஜப்பான், கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய், லெபானன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையின்படி கரூரில் முருங்கை பார்க் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு முருங்கை விவசாயிகளுக்கான மாநாடு, கருத்தரங்கம், கண்காட்சி நடத்திய செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கும், தமிழக அரசுக்கும், தொழில் துறைக்கும் கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications