கரூர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமான வரி சோதனை..சீல் வைக்கப்பட்ட அறை உடைப்பு
கரூர்: கரூரில் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட வீட்டின் அறையை உடைத்து மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் , அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் அவரது , சகோதரர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதோடு பலரது அலுலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட சக்தி மெஸ் கார்த்தி என்பவரது வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சோதனை செய்து சீல் வைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த போது திமுகவினர் கற்களை வீசி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த முறை துணை ராணுவப்படை வீரர்கள் உதவியினர் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications