கரூர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமான வரி சோதனை..சீல் வைக்கப்பட்ட அறை உடைப்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட வீட்டின் அறையை உடைத்து மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் , அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் அவரது , சகோதரர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதோடு பலரது அலுலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Karur Sakthi Mess owner Karthiks house income tax raid

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட சக்தி மெஸ் கார்த்தி என்பவரது வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சோதனை செய்து சீல் வைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த போது திமுகவினர் கற்களை வீசி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த முறை துணை ராணுவப்படை வீரர்கள் உதவியினர் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+