கரூர் துயரம்.. ”தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்.. ச்ச” வீடியோ கடைசியில் சத்யராஜ் சொன்ன வார்த்தை!
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்த்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். தவறு செய்தவன் திருந்த பார்க்க வேண்டும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் என்று கூறியுள்ள சத்யராஜ், தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால், தவறு திரும்பவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தபோது பேசுகையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஸ்டாலின் பேசுகையில், அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது துயரமான சம்பவம். இது இதுவரை நடக்காதது, இனிமேல் நடக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
இதன்பின் கரூர் அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் உயிரிழந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், "கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது.. தப்பு என்பது தெரிந்து செய்வது.. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்.. தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்றி, தவறு சிறிதாக இருக்கும் போதே திருத்திக் கொள்ள வேண்டும். தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால், தவறு திரும்பவும் வராமல் பார்த்துக்கோ.. ச்ச" என்று தெரிவித்துள்ளார். சத்யராஜின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் மக்களிடையே நடந்து வருகிறது.
-
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்! -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்!












Click it and Unblock the Notifications