காமக்கொடூரன்.. முதலில் குமார்.. அப்பறம் மாரிமுத்து.. துடிதுடித்த 17 வயது பிஞ்சு.. கதிகலங்கிய கரூர்
பள்ளி மாணவியை சீரழித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
கரூர்: "உன்னைதான் கல்யாணம் செய்துக்குவேன்" என்று சத்தியம் செய்தே, இளம்பெண்ணிடம் பலமுறை உறவு வைத்து கொண்டுள்ளான் ஒரு கொடூரன்.. இந்த ஆபாச வீடியோவை காட்டி காட்டியே, அதே பெண்ணை பலமுறை மிரட்டி மிரட்டி சீரழித்துள்ளான் இன்னொரு காமக்கொடூரன்.. நடந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்டு, கரூர் மாவட்டமே கதிலங்கி போயுள்ளது..!
Recommended Video
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தபெண்.. வெறும் 17 வயசுதான் ஆகிறது.. அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்த மாணவிக்கு திருப்பூரை சேர்ந்த குமார் என்ற இளைஞர் ஃபேஸ்புக் மூலம் பழக்கமாகி உள்ளார்.. இந்த பழக்கம், நாளடைவில் காதலாக வந்து நின்றது..
15 வயது சிறுவனுடன் உறவு.. 35 வயது பெண் கைது.. இன்ஸ்டாவில் 100 ஆபாச மெசேஜ்கள்.. விசாரணையில் திடுக்!
உறவு
அதிலும் மாணவி, அந்த இளைஞர் குமாரை அளவுக்கு அதிகமாக காதலித்து வந்துள்ளார்.. இதைதான் குமார் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.. கல்யாணம் செய்துக்கிட்டால் அது உன்னைத்தான் என்று சொல்லி நெருக்கமாக உறவு வைக்கும் அளவுக்கு சென்றுள்ளார்.. அதை செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டார்.. பிறகு, பல முறை கட்டாயப்படுத்தியும் மாணவியிடம் உறவு வைத்துக் கொண்டுள்ளார் குமார்..
மெக்கானிக்
இந்த விஷயம் அனைத்தும், மாரிமுத்து என்பவருக்கு தெரிந்துள்ளது.. மாரிமுத்து, மாணவி வசித்து வரும் தெருவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருபவராம்.. 35 வயதாகிறது.. ஆபாச வீடியோக்களை மாரிமுத்துவும் பார்த்துள்ளார்.. இந்த வீடியோ வெளியே வராமல் இருக்க வேண்டுமானால், தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும், இல்லாவிட்டால் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவேன் என்றும் மாணவியை மிரட்டி உள்ளார்.. இப்படி மிரட்டி மிரட்டியே அவரும் மாணவியிடம் பலமுறை உறவு வைத்துக்கொண்டாராம்.
உடலுறவு
இப்போது மாணவி கர்ப்பமாக இருக்கிறார்.. 8 மாத கர்ப்பம்.. இருவரிடமும் சிக்கி கொண்டு விழித்த மாணவி, என்ன செய்வதென்றே தெரியாமல் கரூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தார்.. அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வந்தார்... இப்போது மெக்கானிக் மாரிமுத்துவை பிடித்துவிட்டார்கள்.. போக்சோவில் கைது செய்து உள்ளே தூக்கி வைத்துள்ளார்கள்.. ஆனால், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான குமாரை காணோமாம்.. அவரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்..
கைது
பலமுறை மாணவியுடன் உடலுறவு கொண்ட விஷயமும், அது தொடர்பான வீடியோவும் மாரிமுத்துவுக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை.. ஆனால், அந்த வீடியோவை காட்டி காட்டியே, மாரிமுத்துவும் பலமுறை உறவு கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.. குமாரும், மாரிமுத்துவும் இளம்பிஞ்சுவின் வாழ்க்கையையே நாசமாக்கிய இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..!