நீங்களும் நானும் ஒன்னுதான்.. மறந்து விடாதீர்கள்.. எடப்பாடி பழனிச்சாமியை வாரிய செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமியை வாரிய செந்தில் பாலாஜி-வீடியோ

    கரூர்: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என திமுகவில் அண்மையில் இணைந்த செந்தில் பாலாஜி பேசினார்.

    பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் இணையும் விழாவுக்கு செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.

    கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள செந்தில் பாலாஜி பேசுகையில் தமிழகத்தில் வர விருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் தகுதிப்படைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த 5 ஆண்டுகளில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள தம்பிதுரை எந்த திட்டத்தையும் செய்யவில்லை.

    சூளூரை

    சூளூரை

    2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிதான் தம்பிதுரையின் கடைசி வெற்றி. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் யாரை இந்த தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெறச் செய்வோம் என சூளூரைப்போம்.

    விவசாயம்

    விவசாயம்

    கரூர் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டசபை தொகுதிகளிலும் ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம். கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரானாவர் பழனிச்சாமி. நானும் என்னுடன் இருந்த 5 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமிக்கு ஓட்டு போடாமல் இருந்திருந்தால் அவர் என்றைக்கோ விவசாயம் பார்க்க போயிருப்பார்.

    பதவியேற்றோம்

    பதவியேற்றோம்

    ஆனால் இன்னிக்கு தேசத்தில் ஏதோ நன்மை செய்துவிட்டார் போல் பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, நீங்கள் வேண்டுமானால் 4 முறை சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கலாம். ஆனால் நீங்களு்ம நானும் ஒரே நாளில்தான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டோம். வரலாறை மறந்துவிட்டு பேச வேண்டாம்.

    விலகி

    விலகி

    எடப்பாடி பழனிச்சாமி அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்தித்து வாக்கு கேட்டு முதல்வர் நாற்காலியில் அமரட்டும். நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். இல்லையென்றால் நீங்கள் அரசியலை விட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

    ஸ்டாலினால் மட்டுமே முடியும்

    ஸ்டாலினால் மட்டுமே முடியும்

    கூவத்தூரில் குறுக்குவழியில் படி போட்டதால் முதல்வர் பதவியில் உட்கார்ந்துள்ளார் எடப்பாடி. தமிழக மக்களுக்கு எடப்பாடி துரோகத்தை தவிர வேறு எதையும் செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம், தங்கமணி, வேலுமணி, தம்பிதுரை ஆகியோர் தங்கள் மீது வழக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே தமிழக மக்களின் நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளனர். தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+