அடுத்த நாங்குநேரி? ஊருக்குள் புகுந்து பட்டியலின மாணவன் மீது தாக்குதல்! பாட்டியையும் விடாத மாணவர்கள்
கரூர்: நாங்குநேரியில் பட்டியலின மாணவனையும், அவரது தங்கையும் பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டினர். அதேபோல் தற்போது கரூரில் பட்டியலின மாணவனையும், அவனது பாட்டியையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஊருக்குள் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த 17 வயது நிரம்பிய சின்னத்துரையிடம் சாதிபாகுபாடு காட்டி துன்புறுத்தினர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் துன்புறுத்திய மாணவர்களை கண்டித்தது.

இதையடுத்து சில மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மேலும் தடுக்கப்போன அவரது தங்கை சந்திரா செல்வியையும் வெட்டியது. இருவரும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
சாதி பாகுபாட்டால் பட்டியலினத்தை சேர்ந்த அண்ணன்-தங்கை மீது நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் 5க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தான் இன்னொரு பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவரையும், அவரது பாட்டியையும் சில மாணவர்கள் தாக்கிய சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.
அதாவது கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அருகே வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவர். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தனது பாட்டியுடன் வசித்து கொண்டு உப்பிடமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நியைில் தான் திடீரென்று ஊருக்குள் நுழைந் கும்பல் அந்த மாணவர் மற்றும் அவரது பாட்டியை விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிவிட்டு ஓடியது. இதில் 10ம் வகுப்பு மாணவரும், அவரது பாட்டியும் காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே தான் பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதில் தாக்குதல் நடத்தியவர்களின் முகங்கள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் 2 கல்லூரி மாணவர்கள் மற்றும் 2 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியதன் பின்னணி காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
அதாவது தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மாணவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் புலியூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கும், பட்டியலின மாணவருக்கும் பஸ்சில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து 12ம் வகுப்பு மாணவர்கள் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது பாட்டியை தாக்கியது தெரியவந்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications