Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த நாங்குநேரி? ஊருக்குள் புகுந்து பட்டியலின மாணவன் மீது தாக்குதல்! பாட்டியையும் விடாத மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: நாங்குநேரியில் பட்டியலின மாணவனையும், அவரது தங்கையும் பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டினர். அதேபோல் தற்போது கரூரில் பட்டியலின மாணவனையும், அவனது பாட்டியையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஊருக்குள் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த 17 வயது நிரம்பிய சின்னத்துரையிடம் சாதிபாகுபாடு காட்டி துன்புறுத்தினர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் துன்புறுத்திய மாணவர்களை கண்டித்தது.

students arrested for attacking 10th class student and grandmother belonging to Scheduled Community in Karur

இதையடுத்து சில மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மேலும் தடுக்கப்போன அவரது தங்கை சந்திரா செல்வியையும் வெட்டியது. இருவரும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

சாதி பாகுபாட்டால் பட்டியலினத்தை சேர்ந்த அண்ணன்-தங்கை மீது நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் 5க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தான் இன்னொரு பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவரையும், அவரது பாட்டியையும் சில மாணவர்கள் தாக்கிய சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

அதாவது கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அருகே வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவர். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தனது பாட்டியுடன் வசித்து கொண்டு உப்பிடமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நியைில் தான் திடீரென்று ஊருக்குள் நுழைந் கும்பல் அந்த மாணவர் மற்றும் அவரது பாட்டியை விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிவிட்டு ஓடியது. இதில் 10ம் வகுப்பு மாணவரும், அவரது பாட்டியும் காயமடைந்தனர்.

இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே தான் பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதில் தாக்குதல் நடத்தியவர்களின் முகங்கள் பதிவாகி இருந்தன.

students arrested for attacking 10th class student and grandmother belonging to Scheduled Community in Karur

இதையடுத்து சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் 2 கல்லூரி மாணவர்கள் மற்றும் 2 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியதன் பின்னணி காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

அதாவது தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மாணவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் புலியூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கும், பட்டியலின மாணவருக்கும் பஸ்சில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து 12ம் வகுப்பு மாணவர்கள் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது பாட்டியை தாக்கியது தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+