அமமுக தான் பிரதமரை முடிவு செய்யும்... முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆரூடம்
கரூர்: அதிமுகவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விலகி திமுகவில் இணைந்துள்ளார். இந்தநிலையில், அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே சோர்வு ஏற்பட கூடாது என்பதற்காக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் அதிமுக முன்னாள் கொறடா மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சுமார் 200-பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பழனியப்பன் கூறியதாவது: உண்மையான அதிமுகவாக அமமுக தான் இருக்கிறது. உண்மையான தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருப்பவர்கள் தான் இங்கு வந்து சேரவேண்டும். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு வளர்ந்தவர் செந்தில்பாலாஜி. இன்று திமுகவிற்கு சென்றதால் அம்மாவின் புகைப்படத்தை கூட பாக்கெட்டில் வைக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். இதனால் தான் தினகரன் திமுகவுக்கு சென்றதற்கு பதிலாக அதிமுகவிற்கே சென்றிருக்கலாம் என்று கூறினார் என்றார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காது. 40-இடங்களில்லும் அமமுக போட்டியிட்டு வெற்றி பெறும். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரிக்கும் கட்சி தான் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications