பலே பலே.. ரூ.20 டோக்கன் போய் இப்போ ரூ.2.000 ஜெராக்ஸ் டோக்கன்.! செந்தில் பாலாஜி மீது புகார்
அரவக்குறிச்சி: தோல்வி பயத்தால் அரவக்குறிச்சியில் வாக்கு சதவீதத்தை குறைக்கும் முயற்சியில், திமுக ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பல தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதில் ஒரு பகுதியாக அரவக்குறிச்சியில் ரூ.2,000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து, டோக்கனாக கொடுத்து வாக்காளர்களுக்கு திமுக விநியோகித்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அ.ம.மு.க.,வில் செந்தில்பாலாஜி இருந்த போது ஆர்.கே.,நகர் தேர்தலுக்காக ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து பழகியவர் செந்தில் பாலாஜி. இப்போது இந்த டெக்னிக்கை அரவக்குறிச்சியிலும் செயல்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவரின் மூலம், ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து வாக்காளர்களுக்கு டோக்கனாக தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாலை 3 மணிக்கு மேல் கலர் ஜெராக்ஸ் டோக்கனுக்கு பணம் தருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம் தருவதாகவும் பல இடங்களில் கூறி வாக்காளர்களை ஓட்டு போட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.
இன்னும் சில இடங்களில் வாக்காளர்களை மிரட்டி மாலையில் ஓட்டு போடுங்கள் பணம் தருகிறோம் என்று கூறி திமுக அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சாடினார். இப்படி கூறியே புகளூர் நால்ரோடு, காந்திநகர் மற்றும் முல்லை நகர் உள்ளிட்ட இடங்களில், வாக்காளர்களை இதுவரை ஓட்டுப்போட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.
தோல்வி பயத்தால் மக்களை திசை திரும்பும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அராஜகத்தில் ஈடுபடும் திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் வலியுறுத்தினார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications