கிருஷ்ணகிரியில் காலையிலேயே ஜேசிபியுடன் அதிகாரிகள்.. குவிந்த போலீஸ்.. இடித்து தள்ளப்பட்ட 26 வீடுகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் என்ற கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்பை அகற்றும் போது கடும் எதிர்ப்பு வர, நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வருவாய் துறையினர் வீடுகளை இடித்து அகற்றினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் என்ற கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் பொதுப்பாதையாக இருந்த நிலங்களை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நாசன் என்பவர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ஜெகதாப் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன்பேரில் கடந்த 2024ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் சென்றனர். அப்போது அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் அதிகாரிகளை தடுத்தனர். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி தலைமையிலான வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற சென்றுள்ளார்கள். அதில் ஆக்கிரமிப்பிலுள்ள ஒரு வீட்டின் முகப்பை பொக்லைன் மூலம் இடித்தனர். அப்போது அங்கு திரண்ட மக்கள், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வரும் போது எல்லாம், மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, சட்டவிரோதம் என எச்சரிக்கை விடுத்தார் அப்போது, 'வீடுகளின் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு வைத்து செல்லுங்கள் ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகளை நாங்களே இடித்து அகற்றி கொடுக்கிறோம்' என பொதுமக்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் அவகாசம் அளித்து அதிகாரிகள் சென்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதன்படி இன்று மீண்டும் ஜெகதாப் கிராமத்திற்கு சென்றனர். அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் அடியோடு இடித்து அகற்றினார்கள். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications