கிருஷ்ணகிரி அருகே சர்ரென வந்த கார்.. போலீஸ் வாகனம் மீது டமால் என மோதல்.. எஸ்எஸ்ஐ காயம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வேகமாக வந்த கார் போலீஸ் வாகனத்தின் மீது மோதியதில் மாரண்டஹள்ளி சிறப்பு காவல் ஆய்வாளர் காயமடைந்துள்ளார்.

கொரோனா பாதிப்பை அடுத்து அதன் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

A video shows how a car dashes police patrol vehicle near Krishnagiri

இதனால் இந்தியா முழுவதுமுள்ள மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்திப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் போலீஸாரும் இந்தியா முழுவதும் முக்கிய சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தேவையின்றி வெளியே வந்தால் அவர்களை எச்சரித்தும் தண்டனை கொடுத்தும் போலீஸார் அனுப்பி வைக்கின்றனர்.

A video shows how a car dashes police patrol vehicle near Krishnagiri

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட பாலக்கோடு வட்டம், வெள்ளிச்சந்தை அருகே ஒரு சந்திப்பு பகுதியில் போலீஸார் வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் போலீஸார் வாகனம் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்த மாரண்டஹள்ளி காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த காரில் இருந்தவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+