கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு! உறவினர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி: ஒசூர் அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு சிறுவன் நேற்று கடத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுவன் சடலமாக காட்டு பகுதியில் மீட்கப்பட்ட இருக்கிறார். கடத்தல் குறித்து புகார் அளித்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஞ்செட்டியை அடுத்த மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்-மஞ்சு தம்பதியின் 13 வயது மகன் ரோகித் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை முதல் காணவில்லை. எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் சிறுவனை சிலர் காரில் ஏற்றிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காலை வரை சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இங்குள்ள வனப்பகுதியில் கொண்டை ஊசி வளைவில் சாலை ஓரத்தில் சிறுவனின் சடலம் கிடைத்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அஞ்செட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த 3 மணி நேரமாக பெற்றொர், உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண் ஒருவர் காதலருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்ததாகவும், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுவனை சமாதானம் படுத்த முயன்றதாகவும், இதில் சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஊர் மக்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவத்திற்கான காரணம் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications