அட... உருது மொழியில் 'உறுதி' கொடுத்த அதிமுக வேட்பாளர்.. சரளமா பேசுறாரே!
கிருஷ்ணகிரி: ஒசூர் மாநகரில் இஸ்லாமியர் அதிக அளவில் வசிக்கக்கூடிய பகுதியில் அதிமுக வேட்பாளர் உருதுமொழியில் பேசி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி பிரசாரம் மேற்கொண்டார். ஒசூர் மாநகரில் இமாம்பாடா, கும்பார் பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட ஜோதி பாலகிருஷ்ணரெட்டிக்கு இஸ்லாமிய பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இஸ்லாமிய பெண்களிடம் உருது மொழியில் பேசிய வேட்பாளர் ஜோதி, "அதிமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
அமைதியான ஆட்சியை மீண்டும் வழங்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சராக்க வேண்டும். ஒசூர் மாநகரில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
இரவு, பகல் நேரங்களில் மகளிர் போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு அவர் வாக்குகளை சேகரித்தார்.












Click it and Unblock the Notifications