கிருஷ்ணகிரி அரசு அதிகாரி ரூமில் கேட்ட பீப் சத்தம்.. நகராட்சி கமிஷனர் ஆபீஸ் கடிகாரத்தில் அந்த பொருள்?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அறையில், கடிகாரத்தில் யாரோ ரகசிய கேமராவை வைத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இங்கு கேமரா வைத்தது யாரை கண்காணிப்பதற்காக? என்பது குறித்த விசாரணை துரிதமாக துவங்கியிருக்கிறது.
கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இங்கு கமிஷனராக கிருஷ்ணமூர்த்தி பணியாற்றி வருகிறார்.. நகராட்சி தலைவராக பரிதா உள்ளார்..

திமுக செயலாளர்: ஃபரிதாவின் கணவர் பெயர் நவாப்.. இவர் நகர திமுக செயலாளராக உள்ளார்... இதனால், நகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வந்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன.. நாளுக்கு நாள் இவரது செயல்பாட்டினால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், கமிஷனர் அறையில் உள்ள சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா இருந்தது தெரிய வந்துள்ளது. இதில் பதிவான காட்சிகளும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகின்றன.. அதாவது, கடந்த 25ம் தேதி நவாப், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் காரசாரமாக விவாதம் நடத்துவதும், உடனே கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி சமாதானம் செய்வதும் என காட்சிகள் அதில் பதிவாகியிருக்கின்றன..
ரகசிய கேமரா: இந்த ரகசிய கேமராவை வைத்தது யார்? இதுபோல் வேறு எங்கெல்லாம் கேமரா வைக்கப்பட்டது? என்பது குறித்து விசாரிக்கும்படி கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள எனது அறையில் தமிழ் எண்ணுருக்களுடன் கூடிய சுவர் கடிகாரத்தில் (டிஜிட்டல் கடிகாரம்) ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா எந்த நபரால் பொருத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பீப் சத்தம்: தொடர்ந்து இது குறித்து ஆணையாளர் சொல்லும்போது, "நான் விடுப்பில் சென்றிருந்தேன். கடந்த 29-ம் தேதி என்னுடைய அறைக்குள், நகராட்சி ஊழியர்கள் நுழையும்போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில், திடீரென பீப் சத்தம் கேட்டது.. இதையடுத்து ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோதுதான், உள்ளே ரகசிய கேமரா இருப்பது தெரிந்தது.
கடிகாரத்தில் இருந்த கேமரா, சிப் எடுக்கப்பட்டுவிட்டது.. ஆனால் சுகாதார ஆய்வாளர், திமுக நகர செயலாளர் இடையே ஏற்பட்ட வாக்குவாத காட்சிகள் மட்டும் வெளியானது எப்படி என்று தெரியவில்லை.
என்ன காரணம்: அதுமட்டுமல்ல, நகராட்சியில் 4 இடங்களில் டிஜிட்டல் கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.. அப்படியிருக்கும்போது, மற்ற இடங்களில் வைக்கப்படாத ரகசிய கேமரா, என்னுடைய ரூமில் மட்டும் வைக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை... இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கமிஷனர் அறையிலேயே மர்ம நபர்கள் ரகசிய கேமரா வைத்திருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications