நாம் தமிழர் ‘மாஜி’ நிர்வாகி சிவராமனின் தில்லாலங்கடி வேலை..மாணவிகள் காசிலேயே மெடல்! 13 மாணவிகள் பாவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி என்சிசி முகாமில் 8ஆம் வகுப்பு மாணவியை தொடர்ந்து, மேலும் 13 மாணவிகள் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமனால் வன்கொடுமை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தவும், இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமகிருஷ்ணன் என்சிசி முகாம் என்ற பெயரில் செய்த பாலியல் அத்துமீறல்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் என்சிசி முகாம் நடத்துகிறேன் என்ற பெயரில் 17 மாணவிகளை நான்கு நாட்கள் பள்ளியில் தங்க வைத்திருக்கிறார்கள். இதற்கான உரிய அனுமதியை பள்ளிக்கல்வித்துறை மட்டும் மாவட்ட என்சிசி தலைமையகத்தில் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகாமில் பயிற்சியாளரான சிவராமன் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதிகாலையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அந்த புகாரை மறைப்பதற்காக ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகமே உடந்தையாக இருந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
போலீசாரும் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மாணவி மட்டுமல்லாது அதே முகாமில் கலந்து கொண்ட மேலும் 13 மாணவிகளை நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன், வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அவர் போலி என்சிசி நிர்வாகி என்பதோடு ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் காட்டி கமாண்டர் என கூறி ஏமாற்றி இருக்கிறார். மேலும் பள்ளியில் படித்தபோது சிவராமன் என்சிசி-யில் இருந்திருக்கிறார். அப்போது கிடைத்த அனுபவத்தை கொண்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று தான் என்சிசி பயிற்சியாளர் எனக்கூறி போலியான ஆவணங்களை தயாரித்து மோசடி செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தற்போது பிரச்சினையில் சிக்கி இருக்கும் காந்திக்குப்பம் கிங்ஸிலின் பள்ளியில் என்சிசி பயிற்சியளிக்க ஒரு மாணவிக்கு 1500 ரூபாய் வசூல் செய்திருக்கிறார். அந்த பணத்திலேயே மாணவிகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சில கல்வி நிறுவனங்களிலும் இதேபோல சிவராமன் முகாம் நடத்தி வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
மேலும் தான் அரசியல் கட்சி சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எனக் கூறி தனியார் பள்ளி நிர்வாகத்தினரை மிரட்டி பயிற்சி முகாம்களை சிவராமன் நடத்தி வந்திருப்பதாக மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த பள்ளிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் சிவராமன் வேலையை காட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது தேசிய மகளிர் ஆணையம். இதுகுறித்து தாமாக முன்வந்து ஆணையம் விசாரணையை தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையை அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து மூன்று நாளில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications