ஆன்மா வீட்டுக்கு வரணும்.. விபத்தில் மகனை இழந்த பெற்றோர் செய்த பூஜை .. ஓசூர் சாலையை நனைத்த கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஓசூரில் நடு ரோட்டில் பெற்றோரும் உறவினர்களும் பூக்களை தூவி பூஜை செய்தனர். அப்போது அவர்கள் சிந்திய கண்ணீர் சாலையில் தெறித்தது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த சம்பவத்தை ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர். எதனால் இந்த பூஜை, அந்த பெற்றோரின் கண்ணீருக்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

ராஜசேகர், பெயரைப் போலவே ராஜா போல இருந்த இளைஞன். ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி மாருதிநகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் விஜயலட்சுமி தம்பதியின் மகன். தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

Pooja performed by parents who lost their son in a road accident in Hosur

படித்து முடித்து விட்டு மிகப்பெரிய விமான நிறுவனத்தில் வேலைக்கு போக வேண்டும் என்பது ராஜசேகரின் கனவு. பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையில் நன்றாகவே படித்து வந்தார் ராஜசேகர். அவர் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது. நாய் வடிவில் வந்த எமன் ராஜசேகரின் உயிரை பறித்துக்கொண்டான்.

அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி இரவு, ராஜசேகர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஓசூர் சிப்காட் காவல் நிலையம் அருகே சாலையில் படுத்திருந்த நாய் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலை தடுமாறிய ராஜசேகர் கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து ராஜசேகர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகனின் மரணச்செய்தி ராஜசேகரின் பெற்றோர் துரைராஜ், விஜயலட்சுமியின் தலையில் இடியாக விழுந்தது. இறுதிச்சடங்குகள் முடிந்து கண்ணீர் மல்க மகனின் சடலத்திற்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினர் பெற்றோர்.

ஆனாலும் மகனை மறக்கமுடியவில்லை. ராஜசேகரின் தந்தை துரைராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விபத்தில் உயிரிழந்த ராஜசேகரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று சாலையில் மலர்களை தூவி கண்ணீர் மல்க பூஜை செய்தனர்.

ராஜசேகரின் ஆன்மா சாலைகளில் சுற்றித்திரியாமல் வீட்டுக்கு வர வேண்டியும் பூஜைகளை செய்தனர். இது தங்களின் நம்பிக்கை எனவும் இதன் மூலம் உயிரிழந்த தங்களின் மகன் ஆத்மாவாக வீட்டிற்கு வருவார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மகனின் ஆன்மா வீட்டுக்கு வரவேண்டி நடுரோட்டில் பூஜை செய்த பெற்றோரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களின் கதையை கேட்ட பலரும் சோகத்தோடு கடந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+