சசிகலாவுக்கு கார் வழங்கியது ஏன்... அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.ஆர்.சம்பங்கி விளக்கம்..!
கிருஷ்ணகிரி: பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு இன்னோவா கார் கொடுத்ததன் மூலம் தமிழக அரசியல் களத்தின் லைம்லைட்டில் இடம்பெற்றிருக்கிறார் எஸ்.ஆர். சம்பங்கி.
Recommended Video
இந்நிலையில், சசிகலாவுக்கு கார் கொடுத்தது ஏன் என்பது பற்றி அவர் அளித்துள்ள விளக்கத்தில், சசிகலா சென்னை சென்று கொண்டிருந்த போது அவரது கார் பழுதானதால் மனிதாபிமான அடிப்படையில் தனது காரை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாலையில் செல்லும் போது வாகன பழுது ஏற்பட்டு யாராவது நின்றால் நீங்கள் உதவமாட்டீர்களா என்ற கேள்வியையும் முன்வைத்தார். சசிகலா காரில் அதிமுக கொடி கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தனது காரை வழங்கிய சம்பங்கி இவ்வாறு புதிய விளக்கம் ஒன்றை ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ளார்.
பொது எதிரியை ஆட்சிக்கு வரவிடகூடாது.. நான் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன்.. ஒற்றுமை அவசியம்.. சசிகலா
சசிகலாவுக்கு கார் கொடுத்தது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையிலேயே தவிர வேறு உள்நோக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே அதிமுகவிலிருந்து சம்பங்கி நீக்கப்பட்டதாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பெயரில் அறிவிப்பு வெளியானது.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞரிடம் பேசி சட்டப்படி சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார். தமிழக அரசியலுக்கும் இன்னோவா காருக்கும் ஏதோ ஒரு வகையில் பந்தம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.