ஆணவக்கொலையில் ஈடுபட்ட சங்கர் அதிமுக கிளை செயலாளர் இல்லை.. ஆதாரங்களை வெளியிட்டு அதிமுகவினர் மறுப்பு!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் ஜெகன் என்ற இளைஞர், காதலித்து திருமணம் செய்துகொண்டதால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக கிளை செயலாளர் சங்கர் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், சங்கர், அதிமுகவின் கிளைச் செயலாளர் இல்லை என அதிமுகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஊரில் அதிமுக கிளை செயலாளராக இருப்பவர் வேறொருவர் என்றும், சங்கர் அதிமுக உறுப்பினர் மட்டும் தான், அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 டிசம்பரில் நடைபெற்ற கட்சி தேர்தலின் அடிப்படையிலான நியமன அறிவிப்பை வெளியிட்டு, சங்கர் என்பவர் அங்கு அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஆணவப்படுகொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் (28) மார்ச் 21ஆம் தேதி மதியம் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜெகன் கல்லூரி மாணவியான சரண்யாவை காதலித்து வந்ததும், சரண்யா குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்டோர் ஜெகனை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

அதிமுக நிர்வாகி?
தனது மகளை காதல் திருமணம் செய்த ஜெகனை கொலை செய்த வழக்கில் சரண்யாவின் தந்தை சங்கர் சரணடைந்ததை தொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆணவக்கொலையில் ஈடுபட்ட சங்கர், அதிமுக கிளை செயலாளர் என்று தகவல் வெளியானது. அவரது சட்டைப் பையில் ஜெயலலிதா படம் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கிளைக் கழகச் செயலாளர்?
இந்நிலையில், ஜெகன் ஆணவக் கொலை வழக்கில் கைதான சங்கர், அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்றும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சங்கரின் ஊரான பெரியமுத்தூர் புளுகான் கொட்டாய் கிளைக் கழக செயலாளராக இருப்பவர் கண்ணாயிரம். இவர் ஓபிஎஸ் அணியில் இருக்கிறாராம். அங்கு ஈபிஎஸ் அணி சார்பில் கிளைச் செயலாளர் யாரும் இல்லையாம். அதேபோல, அவதானப்பட்டி கோவில் கிளைக் கழக செயலாளராக இருப்பவர் முருகன்.

அடிப்படை உறுப்பினர் மட்டுமே
ஆணவக்கொலை செய்த சங்கர் அதிமுக கிளைச் செயலாளர் எனப் பரவிவரும் தகவல்களை மறுத்து, அவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்தவர்கள் ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 2021 டிசம்பரில் நடைபெற்ற கட்சி தேர்தலின் அடிப்படையிலான நியமன அறிவிப்பை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளனர்.
-
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications