Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீசன்ட் லுக்.. கையில் கட்டப் பை.. அடுத்து சரோஜா செஞ்ச காரியத்தை பாருங்க!

புடவை திருடிய பெண்ணை கடைக்காரர் சரமாரியாக அடித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜவுளிக்கடையில் நூதனமுறையில் திருடியப்பெண்ணிற்க்கு தர்ம அடிக்கொடுத்த கடைக்காரர்

    சூளகிரி: பார்க்க டீசன்ட்டா இருக்கிறவங்கதான் பெரும்பாலும் மொள்ளமாரித்தன காரியத்துல இறங்குறாங்க. இப்படித்தான் நம்ம சரோஜாவும் சிக்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள கிராமம் அட்டகுறிக்கி. இங்கு வசித்து வருபவர்தான் சரோஜா. 30 வயசான சரோஜா பார்க்க ரொம்ப டீசன்ட்டா இருக்கிறார். இவர், சூளகிரியில் ஒரு பிரபலமான ஜவுளிக்கடைக்கு போனார். கையில் ஒரு கட்டை பையை வைத்து கொண்டு கடைக்குள் நுழைந்தார்.

    கட்டைப் பைக்குள் புடவை

    கட்டைப் பைக்குள் புடவை

    பிறகு கடையில் புடவைகளை பார்க்க வேண்டு என்று கூறியதால் நிறைய புடவைகள் அவர் பார்ப்பதற்காக எடுத்து போடப்பட்டது. கடைசியில் யாரும் கவனிக்காத போது, 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நியூ டிசைன் புடவை ஒன்றினை எடுத்து தனது கட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு பணமும் தராமல் நைசாக வெளியே போய்விட்டார்.

    [பீர் பாட்டிலை உடைத்து.. மிக குரூரமாக கொல்லப்பட்ட மதுரை கலைச்செல்வி.. மெரீனா பீச் பயங்கரம் ]

    வேற புடவை எடுத்துக்கட்டுமா?

    வேற புடவை எடுத்துக்கட்டுமா?

    புடவையை ஆட்டைய போட்டு போன சரோஜா திரும்பவும் அதே கடைக்குள் கொஞ்ச நேரத்திலேயே நுழைந்தார். அபேஸ் பண்ண புடவையை பையிலிருந்து வெளியே எடுத்துகொண்டு பில் கவுண்ட்டருக்கு போனார். அங்கே இருந்தவர்களிடம் புடவையை காண்பித்து "இந்த புடவையை போன வாரம் இங்கதான் வந்து வாங்கிட்டு போனேன். ஆனா அதுக்கான ரசீது வீட்டிலயே இருக்கிறது. இந்த புடவையை மாத்திக்கிட்டு வேற புடவையை எடுத்துட்டு போகட்டுமா?" என்று கேட்டுள்ளார்.

    விழித்த சரோஜா

    விழித்த சரோஜா

    புடவையை வாங்கி பார்த்த கடைக்காரர்கள், "ஏம்மா.. இந்த வெரைட்டியே இப்பதான் புதுசா வந்திருக்கு. அதுவும் தீபாவளிக்காக நேத்துதான நாங்களே இந்த புது டிசைனை கடைக்கு எடுத்துட்டு வந்தோம். அது எப்படி போன வாரம் நீ இங்கே வந்து வாங்கியிருக்க முடியும்? வாய்ப்பே இல்லையே" என்று துளைத்தெடுத்தனர்.
    கேள்வி மேல் கேள்வி கேட்க சரோஜா திருதிருவென முழிக்க ஆரம்பித்தார்.

    வெளுத்த கடைக்காரர்

    வெளுத்த கடைக்காரர்

    தடுமாறி தடுமாறி பதில் அளிக்கவும் ஆத்திரமடைந்த கடைக்காரர்கள் நூதன முறையில் திருட்டை அரங்கேற்றிய சரோஜாவுக்கு தர்ம அடி கொடுத்தனர். கடையில் சரோஜா புடவையை திருடி சென்றது முதல், திரும்பி வந்து வேற புடவையை மாற்றி தர சொன்னது, கடைக்காரர் வெளுத்தது வரை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது. இப்படி சரோஜா அடி வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    அடித்திருக்க கூடாது

    அடித்திருக்க கூடாது

    சரோஜாமேல் தப்பே இருந்தாலும் கடைக்காரர் இப்படி அவரை அடித்திருக்க கூடாதுதான். யாரையும் யாருக்குமே அடிக்க உரிமையே இல்லாதபோது ஒரு பெண் என்றும் பாராமல் கடைக்காரர் இப்படி நடந்து கொண்டிருக்க கூடாது. வேண்டுமானால் போலீசில் சரோஜா மீது உரிய புகார் கொடுத்திருக்கலாம். ஆனாலும் தீபாவளி அதுவுமா இதெல்லாம் தேவையா சரோஜா?

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+