Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிச்சுட்டு கும்மாளம் அடிப்பவர்கள் எம்ஜிஆர் ஆகிட முடியுமா..விஜய் மீது கேபி முனுசாமி கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. எம்ஜிஆர் பாணியில் தீவிர திமுக எதிர்ப்பு அரசியலுடன் தவெக தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி எம்ஜிஆர் குணாதிசயங்களுடன், விஜய்யை மறைமுகமாக ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாளை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, மக்கள் அவரை நேசித்தார்கள். அதனால் தான் அண்ணா பெயரில் கட்சியை உருவாக்கினால் கூட எம்ஜிஆர் தான் அந்த கட்சிக்கு சொந்தக்காரர் என்று நினைத்தார்கள். அந்த நடிகர் எங்கே, இப்போதுள்ள நடிகர்கள் எங்கே.

admk-kp-munusamy-slams-vijay-over-comparison-with-mgr

சாராயம் குடிப்பவர்கள்

இப்போதுள்ள நடிகர்கள் உடனே பாட்டிலை திறந்துவிடுவான். சாராயத்தை குடித்துவிடுவான். 4 பொண்ணுகளுடன் டான்ஸ் ஆடுவான். 100 பேரை அடிப்பது போல ஷோ காட்டுவான். அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார்கள். அவர்கள் என்ன தொழிலில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களை நேசிக்கும் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும். ஏழை மக்களின் உணர்வுகளை, நிலைகளை அறிந்து அவர்களுக்காக போராடும் சிந்தனை உள்ள தலைவன் நாட்டிலேயே கட்சி நடத்தி ஆட்சிக்கு வரவேண்டும்.

தன்னுடைய சுய முயற்சியால் கலைத்துறையில் பயணித்து அரசியலுக்கு வந்தபோது கூட கலைத்துறையில் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் தான் புரட்சி தலைவர் நடித்துள்ளார். குடித்துவிட்டு கும்மாளம் போடும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை. குடிப்பவர்களை திருத்தும் கதாபாத்திரத்தில் தான் எம்ஜிஆர் நடித்துள்ளார். படத்திலும் நல்லவர், படத்திலும் அரசியலிலும் தாய் உள்ளத்துடன் இருந்தவர்.

எம்ஜிஆரின் பெருமைகள்

தற்போதுள்ள எந்த நடிகனாவது அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்துள்ளார்களா. தன் சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர் மக்களுக்கே கொடுத்துள்ளார். அதனால் தான் அவரை எட்டாவது கொடை வள்ளல் என்றனர். எதிரிகள் கூட அவரை தவறு சொல்ல முடியாது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் கல்வி செலவை கூட எம்ஜிஆர் கொடுத்ததாக அவரே மேடையில் கூறியுள்ளார். எதிரியையும் கருணையுடன் பார்த்த நாட்டின் ஒரே தலைவர் அவர் தான்.

மக்களின் தேவைகளை

ஏசு பிரானை நாம் நேரடியாக பார்க்கவில்லை. அவரின் கருத்திற்கு கருவாக இருந்தவர் எம்ஜிஆர். அந்த சிந்தனையுடைய தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கி, அதே தாய் உள்ளத்தோடு ஒவ்வொரு தொண்டரையும் வளர்த்தெடுத்தார். அப்படி உருவாக்கிய தலைவரின் பிறந்தநாளில் புரட்சித் தலைவரின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று நாம் சபதம் ஏற்போம். மக்களை நேசிக்கும், தாய் உள்ளத்துடன் இருக்கும் ஆட்சி வர வேண்டும். மக்களை பாதுகாத்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆட்சி வர வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+