Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரியில் இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு.. மனைவி செய்த காரியம்.. மலைத்த பார்த்த ஓசூர் மக்கள்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு பரபரப்பை தந்துவிட்டது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வந்தாலும், இந்த அதிர்ச்சி சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் அங்கு நீங்கவில்லை.. என்னதான் நடந்தது கிருஷ்ணகிரியில்? யாரிந்த பெண் முத்துலட்சுமி?

ஓசூரில் பார்வதி நகரில் வாழ்ந்து வரும் தம்பதி சரவணன் - முத்துலட்சுமி.. சரவணனுக்கு 25 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.

Krishnagiri Hosur Wife

முத்துலட்சுமியுடன் திருமணமாகி 4 வருடங்களாகின்றன.. இந்த தம்பதிக்கு மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர்..

வெளிப்பக்கம் பூட்டப்பட்ட கதவு

சரவணனின் குடும்பம் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தது.. ஆனால், திடீரென இந்த குடும்பமே ஒரே நாளில் நிலைகுலைந்துவிட்டது.. நேற்று விடிகாலையில், சரவணனின் அம்மா மங்கம்மாவின் திடீர் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, வீட்டுக்குள் பார்த்தபோது, சரவணன் ரத்தத்தில் மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

ஆனால், சரவணனின் பக்கத்து ரூம் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.. உள்ளிருந்து குரல் கேட்கவும், அக்கம்பக்கத்தினர் அதை திறந்துள்ளனர்.. அப்போதுதான் மங்கம்மா அந்த அறையில் சிக்கியிருப்பது தெரியவந்தது.. யாரோ மங்கம்மாவை ரூமில் வைத்து வெளிப்பக்கமாக பூட்டியதாக கூறியிருக்கிறார்.. பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து கதறி அழுதார்.

கணவர் சரவணன் பரிதாபம்

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது.. விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையை துவங்கியதுமே, முத்துலட்சுமி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

உடனே அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது, அந்த தெருவின் மூலையில் முத்துலட்சுமி ஒருவருடன் பதட்டமாக நடந்து செல்வது தெரியவந்துள்ளது.. உடனே அவர்களை விரட்டிய போலீசார், முத்துலட்சுமியுடன் சேர்த்து சூர்யா, சக்தி, சந்தோஷ் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்..

முதல் விசாரணையே முத்துலட்சுமியிடம் ஆரம்பமானது.. அப்போதுதான் தன்னுடைய காதல் கதையை போலீசாரிடம் சொன்னார்.

10ம் வகுப்பு பழைய காதல்

ஸ்கூல் படிக்கும்போதே சூர்யாவும், முத்துலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள்.. 10ம் வகுப்பில் மலர்ந்த காதல் இதுவாகும்.. ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனை காதலித்து, திருமணம் செய்து கொண்டாராம் முத்துலட்சுமி.. ஆனாலும், திருமணத்திற்கு பிறகும் பழைய காதலன் சூர்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்..

இந்த விஷயம் சரவணனுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்ததால், வீட்டில் அடிக்கடி புயல் உருவாகி வந்தது... நாளுக்கு நாள் தகராறு வலுத்துவிடவும், கணவனை கொன்றுவிடுவதென முத்துலட்சுமி முடிவுசெய்தார்.

மாமியார் மங்கம்மா

இதற்காக கொலை திட்டத்தை சூர்யாவுடன் சேர்ந்து நடத்த முடிவு செய்தார்.. "இரவு நேரத்தில் சரவணனை கொன்றுவிடலாம்.. கதவை திறந்து வை, எல்லாம் நான்தான் பார்த்துக்கிறேன்" என்று சூர்யா முத்துலட்சுமியிடம் சொன்னாராம்..

அதன்படியே, நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கதவை திறந்து வைத்தார் முத்துலட்சுமி.. உடனே சூர்யா தன்னுடைய நண்பர்கள் சக்தி, சந்தோஷ் இருவரையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.. சரவணனின் அம்மா மங்கம்மா தூங்கி கொண்டிருந்த முத்துலட்சுமி வெளியில் இருந்து பூட்டிவிட்டார்.. பிறகு மூன்றுபேரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சரவணனை அடித்தே கொன்றனர்.

பாவம் அந்த குழந்தைகள்

இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கள்ளக்காதல் ஜோடி உட்பட நண்பர்கள் அனைவருமே ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்..

தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல், சரவணனின் 2 பிஞ்சு குழந்தைகளும் கண்ணீருடன் தவித்து வருகின்றன.. இந்த சம்பவம் தற்போது ஓசூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+