கிருஷ்ணகிரி தீபா.. கடைசியாக நண்பனுக்கு போன போன் கால்.. ஊத்தங்கரையில் என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கஞ்சனூரை சேர்ந்த தீபா என்பவர் போச்சம்பள்ளியில் தனியார் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கேண்டீனில் வேலை செய்து வந்தார். இவரை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது அவர் தனது நண்பரான கவுதமுக்கு போனில் அழைத்து மர்ம நபர்கள் பின்தொடர்வது குறித்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கஞ்சனூரை சேர்ந்த மாதேஷ் என்பவருடைய மனைவி தீபா (வயது 32). இவர் போச்சம்பள்ளியில் தனியார் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கேண்டீனில் பணியாற்றி வந்தார்.மாதேஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். மாதேஷ் தீபா தம்பதிக்கு கவுசிக்தரன் (12) என்ற மகனும், ஷிவானி (10) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தீபா பணியை முடித்து கொண்டு வீட்டிற்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் தீபாவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதை பார்த்து பயந்து போனா தீபா. தனது நண்பரான பள்ள சூளக்கரையை சேர்ந்த கவுதம் (22) என்பவருக்கு போனில் அழைத்து, மர்ம நபர்கள் பின் தொடர்வது குறித்து கூறினாராம்.
அப்போது கவுதம், நான் உனது பின்னாலேயே வருகிறேன். அதனால் நீ பயப்படாமல் செல் என்று அந்த பெண்ணிடம் கூறி உள்ளார். இதனால் தீபா ஸ்கூட்டரில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாராம். இதனிடையே தீபாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கஞ்சனூர் முருகன் கோவில் அருகில் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்து தீபா சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த அந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் தீபாவின் செல்போனில் இருந்து கவுதமிற்கு போன் வந்தது. அப்போது தீபா தன்னை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டதாக கூறி அலறி துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம் அங்கு வேகமாக வந்தார். அப்போது அவர் தீபாவின் உடலில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடுவதை கண்டு கதறி அழுதார். அங்கு படுகாயங்களுடன் கிடந்த தீபாவை மீட்ட கவுதம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தீபாவின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக யாரெல்லாம் பேசினார்கள் என்றும், அவரது ஸ்கூட்டரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குறித்தும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications