தண்ணீர் பிடித்த போது கிருஷ்ணகிரியில் மின்னல் பாய்ந்து இளம்பெண் பலி.. மற்றொரு பெண் காயம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளியின் மனைவி பலியானார்.

Recommended Video

    கிருஷ்ணகிரியில் மின்னல் பாய்ந்து இளம்பெண் பலி - வீடியோ

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    Wife of daily wages in Krishnagiri died after lightning strikes

    இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. இடி மின்னலுடன் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து ஒரு பெண் இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் முன்றம்பட்டி அருகேயுள்ள கேத்துநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் மனைவி கவிதா (26).

    Wife of daily wages in Krishnagiri died after lightning strikes

    இவரும் பக்கத்தில் வீட்டில் உள்ள சரவணன் மனைவி சசிகலாவும் (30) அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னமரத்தின் அருகே தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இருவர் மீது மின்னல் பாய்ந்தது.

    இதில் கவிதா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். உடனிருந்த சசிகலா ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி செய்யபட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+